சங்கீதம்



* நீதிமானின் வாழ்க்கை மற்றும் துன்மார்க்கர் முடிவு. *




இரண்டு பாதைகள்



1. துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,

2. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

3. அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

4. துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.

5. ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.

6. கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.



1
home



சங்கீதங்கள் அத்தியாயம் 1 இல், சங்கீதக்காரன் நீதிமான்கள் மற்றும் துன்மார்க்கரின் வழிகளை வேறுபடுத்துகிறார். நீதிமான்கள் நீரோடைகளில் நடப்பட்ட, செழித்து, கனிகொடுக்கும் மரத்திற்கு ஒப்பிடப்படுகிறார்கள், துன்மார்க்கர்கள் காற்றினால் அடித்துச் செல்லப்பட்ட பதரைப் போல இருக்கிறார்கள். கர்த்தர் நீதிமான்களைக் கவனிக்கிறார், ஆனால் துன்மார்க்கரின் வழி அழியும்.