சங்கீதம்



* கர்த்தரின் ஆட்சி என்றென்றும் நிலைத்திருக்கும். *




ஆண்டவர் கம்பீரமாக அணிந்து உலகை நிறுவுவதைப் பற்றி தாவீது பேசுகிறார்



1. கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், மகத்துவத்தை அணிந்துகொண்டிருக்கிறார்; கர்த்தர் பராக்கிரமத்தை அணிந்து, அவர் அதைக் கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; ஆதலால் பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது.

2. உமது சிங்காசனம் பூர்வமுதல் உறுதியானது; நீர் அநாதியாயிருக்கிறீர்.

3. கர்த்தாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின.

4. திரளான தண்ணீர்களின் இரைச்சலைப்பார்க்கிலும், சமுத்திரத்தின் வலுமையான அலைகளைப்பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர்.

5. உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; கர்த்தாவே, பரிசுத்தமானது நித்தியநாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது.



93
home



தேவன் கம்பீரமாக அணிந்து உலகை நிறுவுவதைப் பற்றி தாவீது பேசுகிறார். வெள்ளம் அவர்களின் குரலை உயர்த்துவதைப் பற்றி அவர் பேசுகிறார், ஆனால் தேவன் வலிமையானவர். தேவ சாட்சிகள் உறுதியானவை என்று பேசி முடிக்கிறார்.