சங்கீதம்



* கர்த்தர் எனது மேய்ப்பர்; அவர் என்னை காப்பாற்றுவார். *




கர்த்தர் என் மேய்ப்பர்



1. கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.

2. அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.

3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.

4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.

5. என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.

6. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.



23
home



இந்த அன்பான சங்கீதம் கடவுளை வழிநடத்தும் மற்றும் வழங்கும் ஒரு மேய்ப்பனாக சித்தரிக்கிறது. தாவீது பச்சை மேய்ச்சல் நிலங்கள் மற்றும் அமைதியான நீர் பற்றி பேசுகிறார், மேலும் இருண்ட பள்ளத்தாக்குகளில் தேவ ஆறுதல் பற்றி பேசுகிறார். ஆண்டவரின் இல்லத்தில் என்றென்றும் வாசம் செய்வதில் நம்பிக்கையுடன் முடிக்கிறார்.