சங்கீதம்



* கர்த்தரின் ஜனங்கள் அவரைப் புகழ்ந்து பாடுதல். *




கர்த்தருக்கு ஒரு புது பாடல்



1. அல்லேலூயா, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி விளங்குவதாக.

2. இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், சீயோன் குமாரர் தங்கள் ராஜாவில் களிகூரவுங்கடவர்கள்.

3. அவருடைய நாமத்தை நடனத்தோடே துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணக்கடவர்கள்.

4. கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.

5. பரிசுத்தவான்கள் மகிமையோடே களிகூர்ந்து, தங்கள் படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.

6. ஜாதிகளிடத்தில் பழிவாங்கவும், ஜனங்களைத் தண்டிக்கவும்,

7. அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும், அவர்களுடைய மேன்மக்களை இருப்பு விலங்குகளாலும் கட்டவும், எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்பேரில் செலுத்தவும்,

8. அவர்கள் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியும், அவர்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும்.

9. இந்தக் கனம் அவருடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும் உண்டாகும். அல்லேலூயா.



149
home



சங்கீதக்காரன் கர்த்தருக்கு ஒரு புதிய பாடலைப் பாடி அவரில் மகிழ்வதற்கு அழைப்பு விடுக்கிறார். இஸ்ரவேலர் தங்கள் படைப்பாளரில் மகிழ்ச்சியடைவதையும், சீயோன் புத்திரர் தங்கள் ராஜாவில் மகிழ்ச்சியடைவதையும் அவர் பேசுகிறார். பழிவாங்குவதற்காக அவர்கள் கையில் இருக்கும் இருபுறமும் கொண்ட வாளைப் பற்றி பேசுகிறார்.