சங்கீதம்



* கர்த்தரை நம்புவோர் என்றென்றும் நிலைத்திருப்பர். *




கர்த்தரை நம்புகிறவர்களை அசைக்க முடியாத சீயோன் மலைக்கு ஒப்பிடுகிறார்



1. கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்.

2. பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்.

3. நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்கள் கைகளை நீட்டாதபடிக்கு, ஆகாமியத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சுதந்தரத்தின்மேல் நிலைத்திராது.

4. கர்த்தாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மைசெய்யும்.

5. தங்கள் கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் கர்த்தர் அக்கிரமக்காரரோடே போகப்பண்ணுவார். இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு.



125
home



சங்கீதக்காரன் கர்த்தரை நம்புகிறவர்களை அசைக்க முடியாத சீயோன் மலைக்கு ஒப்பிடுகிறார். நேர்மையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் அக்கிரமத்தின் செங்கோல் தங்காது என்று அவர் கூறுகிறார். அவர் இஸ்ரேல் மீது அமைதிக்காக ஜெபம் செய்கிறார்