சங்கீதம்



* கர்த்தர் எங்கள் பக்கம் இல்லையென்றால், நாங்கள் அழிந்திருப்போம். *




கர்த்தர் இல்லையென்றால், அவர்கள் விழுங்கப்பட்டிருப்பார்கள்



1. மனுஷர் நமக்கு விரோதமாய் எழும்பினபோது, கர்த்தர் நமது பக்கத்திலிராவிட்டால்,

2. கர்த்தர் தாமே நமது பக்கத்திலிராவிட்டால்,

3. அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில், நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள்.

4. அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,

5. கொந்தளிக்கும் ஜலங்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.

6. நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடாதிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

7. வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.

8. நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது.



124
home



கர்த்தர் இல்லையென்றால், அவர்கள் விழுங்கப்பட்டிருப்பார்கள் என்று சங்கீதக்காரன் பேசுகிறார். வேட்டையாடுபவர்களின் கண்ணியில் இருந்து பறவையைப் போல தப்பிப்பதைப் பற்றி பேசுகிறார். அவர்களின் உதவி இறைவனின் பெயரால் என்று முடிக்கிறார்.