சங்கீதம்



* சீயோன் நகரத்தின் மகிமை. *




கர்த்தருடைய ஆலயத்திற்குச் செல்வதில் சங்கீதக்காரன் சந்தோஷப்படுகிறான்.



1. கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.

2. எருசலேமே, உன் வாசல்களில் எங்கள் கால்கள் நிற்கலாயிற்று.

3. எருசலேம் இசைவிணைப்பான நகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது.

4. அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் கர்த்தருடைய ஜனங்களாகிய கோத்திரங்கள் கர்த்தரின் நாமத்தை ஸ்தோத்திரிப்பதற்குப் போகும்.

5. அங்கே தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.

6. எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக.

7. உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.

8. என் சகோதரர் நிமித்தமும் என் சிநேகிதர் நிமித்தமும், உன்னில் சமாதானம் இருப்பதாக என்பேன்.

9. எங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தினிமித்தம் உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன்.



122
home



எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திற்குச் செல்வதில் சங்கீதக்காரன் சந்தோஷப்படுகிறான். எருசலேம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட நகரமாக கட்டப்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார். ஜெருசலேமின் அமைதி மற்றும் செழிப்புக்காக ஜெபம் செய்ய அவர் அழைப்பு விடுத்துள்ளார்.