சங்கீதம்



* இஸ்ரவேலின் விடுதலைக்கு தேவன் செய்த அற்புதங்கள். *




கர்த்தரின் மகிமையும் மனத்தாழ்மையும்



1. இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் குடும்பம் அந்நிய பாஷைக்காரரான ஜனத்திலுமிருந்து புறப்பட்டபோது,

2. யூதா அவருக்குப் பரிசுத்த ஸ்தானமும், இஸ்ரவேல் அவருக்கு ராஜ்யமுமாயிற்று.

3. கடல் கண்டு விலகி ஓடிற்று; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.

4. மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது.

5. கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; யோர்தானே, நீ பின்னிட்டுத் திரும்புகிறதற்கும்;

6. மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது?

7. பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.

8. அவர் கன்மலையைத் தண்ணீர்த் தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.



114
home



இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வெளியே வருவதையும் யூதா தேவ சரணாலயமாக மாறுவதையும் சங்கீதக்காரன் பேசுகிறார். கர்த்தருடைய சந்நிதியில் கடல் ஓடுவதையும், ஜோர்டான் திரும்பிப் போவதையும், மலைகள் துள்ளுவதையும் பற்றி அவர் பேசுகிறார்.