2 நாளாகமம்

2 நாளாகமம் - "சாலொமோனின் ஆலயம்; யூதாவின் இறுதி நாட்கள்"

2 நாளாகமத்தின் தொகுப்பு:

(மொத்தம் 36 அதிகாரங்கள் உள்ளன. இவைகள் 3 பகுதிகளாகப் பிரிக்கப்படலாம்).

  1. அதிகாரங்கள் 1 முதல் 9: சாலோமோன்
  2. சாலோமோனுடைய ஆரசாட்சியின் ஆரம்பம் (1)
  3. சாலோமோனால் தேவாலயம் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படுதல் (2-7)
  4. சாலோமோனின் மற்ற சாதனைகள் (8-9)
  5. அதிகாரங்கள் 10 முதல் 28: ரெகோபெயாம் முதல் ஆகாஸ் ராஜா வரை
ஆசா ராஜாவின் நாட்களில் உண்டான தேடுதலின் எழுப்புதல்:

2நாள்-15: 1-15,19 அப்பொழுது தேவனுடைய ஆவி ஓதேதின் குமாரனாகிய அசரியாவின்மேல் இறங்கினதினால், 2. அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங்கள், நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார், நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார், அவரை விட்டீர்களாகில், அவர் உங்களை விட்டுவிடுவார். 3. இஸ்ரவேலிலே அநேக நாளாய் மெய்யான தேவனும் இல்லை, உபதேசிக்கிற ஆசாரியனும் இல்லை, வேதமும் இல்லை. 4. தங்கள் நெருக்கத்திலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பி, அவரைத் தேடினபோது, அவர் அவர்களுக்கு வெளிப்பட்டார். 5. அக்காலங்களிலே வெளியே போகிறவர்களுக்கும் உள்ளே வருகிறவர்களுக்கும் சமாதானம் இல்லை, தேசங்களின் குடிகள் எல்லாருக்குள்ளும் மகா அமளி உண்டாயிருந்து,6. ஜாதியை ஜாதியும், பட்டணத்தைப் பட்டணமும் நொறுக்கினது, தேவன் அவர்களைச் சகலவித இடுக்கத்தினாலும் கலங்கப்பண்ணினார். 7. நீங்களோ உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள், உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு என்றான். 8. ஆசா இந்த வார்த்தைகளையும் தீர்க்கதரிசியாகிய ஓதேதின் தீர்க்கதரிசனத்தையும் கேட்டபோது, அவன் திடன்கொண்டு, அருவருப்புகளை யூதா பென்யமீன் தேசம் அனைத்திலும், எப்பிராயீமின் மலைத்தேசத்தில் தான் பிடித்த பட்டணங்களிலும் இருந்து அகற்றி, கர்த்தருடைய மண்டபத்தின் முன்னிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தைப் புதுப்பித்து, 9. அவன் யூதா பென்யமீன் ஜனங்களையும், அவர்களோடேகூட எப்பிராயீமிலும் மனாசேயிலும் சிமியோனிலும் இருந்து வந்து அவர்களோடு சஞ்சரித்தவர்களையும் கூட்டினான், அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடு இருக்கிறதைக் கண்டு, இஸ்ரவேலிலிருந்து திரளான ஜனங்கள் அவன் பட்சத்தில் சேர்ந்தார்கள் 10. ஆசா அரசாண்ட பதினைந்தாம் வருஷம் மூன்றாம் மாதத்திலே அவர்கள் எருசலேமிலே கூடி 11. தாங்கள் கொள்ளையிட்டு ஓட்டிக்கொண்டு வந்தவைகளில் அந்நாளிலே எழுநூறு மாடுகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் கர்த்தருக்குப் பலியிட்டு, 12. தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் தேடுவோம் என்றும், 13. சிறியோர் பெரியோர் ஸ்திரி புருஷர் எல்லாரிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடாதவன் எவனோ அவன் கொலை செய்யப்படவேண்டும் என்றும் ஒரு உடன்படிக்கை செய்து, 14. மகா சத்தத்தோடும் கெம்பீரத்தோடும் பூரிகைகளோடும் எக்காளங்களோடும் கர்த்தருக்கு முன்பாக ஆணையிட்டார்கள். 15. இந்த ஆணைக்காக யூதா ஜனங்கள் யாவரும் சந்தோஷப்பட்டார்கள், தங்கள் முழு இருதயத்தோடும் ஆணையிட்டு, தங்கள் முழுமனதோடும் அவரைத் தேடினார்கள், கர்த்தர் அவர்களுக்கு வெளிப்பட்டு, சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாதபடிக்கு அவர்களை இளைப்பாறப் பண்ணினார். 19. ஆசா அரசாண்ட முப்பத்தைந்தாம் வருஷமட்டும் யுத்தம் இல்லாதிருந்தது.

யோசபாத்தின் நாட்களில் உண்டான எழுப்புதல்கள்:
  1. வேதாகம எழுப்புதல்:

2நாள்-17: 1, 7-10 அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோசபாத் ராஜாவாகி, இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலப்பட்டான். 7. அவன் அரசாண்ட மூன்றாம் வருஷத்தில் யூதாவின் பட்டணங்களிலே உபதேசம் பண்ணும்படிக்கு, அவன் தன் பிரபுக்களாகிய பென்னாயிலையும், ஒபதியாவையும், சகரியாவையும், நெதனெயேலையும், மிகாயாவையும், 8. இவர்களோடேகூடச் செமாயா, நெதனியா, செபதியா, ஆசகேல், செமிரமோத், யோனத்தான், அதோனியா, தொபியா, தோபத்தோனியா என்னும் லேவியரையும், இவர்களோடேகூட ஆசாரியரான எலிஷமாவையும், யோராமையும் அனுப்பினான். 9. இவார்கள் யூதாவிலே உபதேசித்து, கர்த்தருடைய வேதபுஸ்தகத்தை வைத்துக்கொண்டு, யூதாவின் பட்டணங் களிலெல்லாம் திரிந்து ஜனங்களுக்குப் போதித்தார்கள். 10. யூதாவைச் சுற்றியிருக்கிற தேசங்களுடைய ராஜ்யங்களின் மேலெல்லாம் கர்த்தரால் உண்டான பயங்கரம் வந்ததினால், யோசபாத்தோடு யுத்தம் பண்ணாதிருந்தார்கள்.

  1. துதி எழுப்புதல்:

2நாள்-20: 21-22 பின்பு அவன் ஜனத்தோடே ஆலோசனைபண்ணி, பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும், ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்துபோய், கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளதென்று கர்த்தரைப் பாடவும், பாடகரை நிறுத்தினான். 22 அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத் தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப் பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.

III. அதிகாரங்கள் 29 முதல் 39 வரை: எசேக்கியா முதல் யூதேயாவின் சிறைபிடிப்பு வரை

  1. எசேக்கியா ராஜா (29-32)
  2. மனாசே (33)
  3. யோசியா (34-35)

8 வயதில் ராஜாவாகி 31 ஆண்டுகள் ராஜாவாக அரசாண்டான்.

2நாள்-34: 3 அவன் தன் ராஜ்யபாரத்தின் எட்டாம் வருஷத்தில், தான் இன்னும் இள வயதாயிருக்கையில், தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட ஆரம்பித்து, பன்னிரண்டாம் வருஷத்தில் (20ஆவது வயதில்) மேடைகள் தோப்புகள் சுரூபங்கள் விக்கிரகங்கள் ஆகிய இவைகள் அற்றுப்போகும்படி, யூதாவையும் எருசலேமையும் சுத்திகரிக்கத் தொடங்கினான்.

ஆலயத்தின்மீது அக்கரை:

2நாள்-34: 8 அவன் தேசத்தையும் ஆலயத்தையும் சுத்திகரித்தபின்பு, அவன் தன் ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே (26ஆவது வயதில்), அத்சலியாவின் குமாரனாகிய சாப்பானையும், நகரத்தலைவனாகிய மாசெயாவையும், யோவாகாசின் குமாரனாகிய யோவாக் என்னும் மந்திரியையும், தன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படிக்கு அனுப்பினான்.

கண்டெடுக்கப்பட்ட வேதப்புத்தகம்:

2நாள்-34: 14-15,18-19,21,27 கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தை அவர்கள் எடுக்கிறபோது மோசேயைக்கொண்டு கட்டளையிடப்பட்ட கர்த்தருடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை ஆசாரியனாகிய இல்க்கியா கண்டெடுத்தான். 15. அப்பொழுது இல்க்கியா சம்பிரதியாகிய சாப்பானை நோக்கி: கர்த்தருடைய ஆலயத்திலே நியாயப்பிரமாணப் புஸ்தகத்தைக் கண்டெடுத்தேன் என்று சொல்லி, அந்தப் புஸ்தகத்தைச் சாப்பான் கையில் கொடுத்தான். 18 ஆசாரியனாகிய இல்க்கியா என் கையில் ஒரு புஸ்தகத்தைக் கொடுத்தான் என்பதைச் சம்பிரதியாகிய சாப்பான் ராஜாவுக்கு அறிவித்து, ராஜாவுக்கு முன்பாக அதை வாசித்தான். 19 நியாயப் பிரமாணத்தின் வார்த்தைகளை ராஜா கேட்டபோது, அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு... 21. கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தினுடைய வார்த்தை களினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் இஸ்ரவேலிலும் யூதாவிலும், மீதியானவர் களுக்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற எல்லாவற்றின் படியேயும் செய்யும்படிக்குக் கர்த்தருடைய வார்த்தையை நம்முடைய பிதாக்கள் கைக்கொள்ளாத ேபோனபடியினால், நம்மேல் மூண்ட கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான். 27 இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாகத் தேவன் சொன்ன அவருடைய வார்த்தைகளை நீ கேட்கையில், உன் இருதயம் இளகி, எனக்கு முன்பாக நீ உன்னைத் தாழ்த்தி, எனக்கு முன்பாகப் பணிந்து, உன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எனக்கு முன்பாக அழுதபடியினால், நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

  1. யூதேயாவின் சிறைபிடிப்பு (36)

2நாள்-36: 11-12, 15-16 சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்து, பதினொருவருஷம் எருசலேமில் அரசாண்டு, தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான், 12. அவன் கர்த்தருடைய வாக்கை உரைத்த எரேமியா என்கிற தீர்க்கதரிசிக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தவில்லை. 15 அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தையும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கான இரக்க முள்ளவராயிருந்த படியால், அவர்களிடத்துக்குத் தம்முடைய ஸ்தானாபதிகளை ஏற்கெனவே அனுப்பினார். 16. ஆனாலும் அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது, சகாயமில்லாமல் போயிற்று.

ராஜாக்களின் புத்தகமும் நாளாகமும் நமக்குக் கற்பிக்கும் பாடம் என்ன?

யார் தேவனுக்குக் கீழ்படிகிறார்களோ, அவர்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறார்கள். யார் தேவனுக்குக் கீழ் படியாமலிருக்கிறார்களோ அவர்கள் தேவனால் ஒழுங்குபடுத்தப்படுகிற சிட்சையை அனுபவிக்கிறார்கள். ராஜாக்களின் நாட்களில் தேவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகள் மூலம், தேவன் தம்முடைய இரக்கத்தையும், மீட்பின் திட்டத்தையும் வெளிப்படுத்துவதை நாம் அறியமுடிகிறது.

கர்த்தருடைய வீடு என்ற வார்த்தை பழையஏற்பாட்டில் மொத்தம் 184 முறை வருகிறது. இதில் ராஜாக்களின் புத்தகங்களில் 61 முறையும், அதிகமாக நாளாகமங்களில் 69 முறையும் வந்துள்ளது. கர்த்தருடைய ஆலயமாகிய வீடு முக்கியப் படுத்தப்படுவதை இது வெளிப்படுத்துகிறது. அதன்விளைவாக, "கர்த்தருடைய வீடாகிய ஆலயம் கட்டப் படுதலைக்குறித்த புத்தகமாகிய எஸ்றா" அடுத்த புத்தகமாக வருவதை நாம் பார்க்கிறோம்.

Exploring the Book of 2 Chronicles: A Comprehensive Guide to its Themes, Stories, and Lessons

Introduction: Understanding the Significance of 2 Chronicles in the Bible

2 Chronicles, Old Testament, biblical books, historical accounts, religious texts

The Structure and Overview of 2 Chronicles

King Solomon's reign, divided kingdom, genealogies of Israel's kings, temple construction

Key Themes Explored in 2 Chronicles

Faithfulness to God, consequences of disobedience, worship and prayer, divine intervention

Prominent Stories and Characters in 2 Chronicles

King Solomon's wisdom and downfall, King Asa's reforms and faithfulness to God,King Jehoshaphat's victory through prayer and praise

Theological Lessons from 2 Chronicles for Modern Believers

Lessons on leadership and governance,the importance of seeking God in times of trouble,the power of repentance and restoration,the blessings that come from obedience to God's commands

Conclusion: The Timeless Relevance of 2 Chronicles for Today's Christians